பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இடைவேளைக்கு முன் அப்பாவியாகவும் இடைவேளைக்குப்பின் அடப்பாவி என்று சொல்லும்படியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள 'வருடு காவலேனு' படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது., “அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை. என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை” என கூறியுள்ளார் ரிது வர்மா.