அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்புச் செய்தியாக சமந்தா, நாக சைதன்யா பிரிவு இருந்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா. தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்கச் சென்றுள்ளார். ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்றுப் பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. உத்தரகாண்ட்டில் கடும் மழை பெய்ததால் இன்னும் பத்ரிநாத் செல்வதற்கான சாலைகள் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.