வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது |

டாப்ஸீ கதாநாயகியாக நடித்த 'ராஷ்மி ராக்கெட்' கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இப்படத்தை பாலிவுட் விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படம் குறித்து இங்குள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக இன்று அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்கார்ர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்...வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.