மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் 'ஆடுகளம்' படம் அறிமுகமான டாப்ஸி, தெலுங்கு, ஹிந்தியிலும் பிரபலமான நடிகை. சமீபத்தில் வெளிவந்த 'டங்கி' படத்தில் ஷாரூக் ஜோடியாகவும் நடித்திருந்தார். அவரது நீண்ட நாள் நண்பரான மத்தியாஸ் போ-வை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன.
அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “இப்போது வதந்திகளை ஆரம்பிப்பது அர்த்தமற்றது. இப்போது இதை யூகமாக வெளியிடும் நீங்கள், பத்து வருடங்களுக்கு முன்பு இந்த மனிதரை 'டேட்டிங்' செய்ய ஆரம்பித்த போதே வெளியிட்டிருக்க வேண்டும். நான் எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவராக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், எதற்காக இவ்வளவு ஆர்வம் என்பது எனக்குப் புரியவில்லை.
நீங்கள் இதை இப்படியே விட்டால், சரியான நேரத்தில் செய்தியை பகிர்வேன். ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் செய்வேன். நான் எதையும் தவறாகவோ, சட்ட விரோதமாகவே செய்யவில்லை. நான் சிங்கிள், நான் திருமணம் செய்து கொள்வேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லையா அல்லது வேறு ஏதாவதா?. நான் எனது உறவுகளைப் பொறுத்தவரையில் நேர்மையாக இருக்கிறேன், நான் எதையும் மறைக்கவில்லை. எனவே, அது நடக்கும் போது உங்களுக்கும் தெரிய வரும். மக்கள் எனது நடிப்பை நேசிக்கிறார்கள், ஆனால், எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவரிக்க வேண்டும் என நான் விரும்பவில்லை,” என்று பேசியிருக்கிறார்.