மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் ‛ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அதிகமாக ஹிந்தியில் நடித்து வருகிறார். அக் ஷய் குமார் உடன் கேல் கேல் மெயின் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் வெளியாகிறது.
இப்படம் புரமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் வேறு யாரையும் போல வாழ விரும்பவில்லை. என்னை போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாற வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. என் வாழ்க்கையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். காரணம் இங்கு நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன்'' என்றார்.