காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில் மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் வயநாடு, மேப்பாடி உள்ளிட்ட பகுதியில் ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில் ‛‛இந்தியா சந்தித்த பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி. இழந்ததை திரும்ப பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்திற்கு உதவலாம்'' என்றவர் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.