ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் |
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில் மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் வயநாடு, மேப்பாடி உள்ளிட்ட பகுதியில் ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில் ‛‛இந்தியா சந்தித்த பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி. இழந்ததை திரும்ப பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்திற்கு உதவலாம்'' என்றவர் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.