விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில் மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால் வயநாடு, மேப்பாடி உள்ளிட்ட பகுதியில் ராணுவ சீருடையில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறுகையில் ‛‛இந்தியா சந்தித்த பேரிழப்புகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் இன்னும் சிக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றி. இழந்ததை திரும்ப பெற முடியாது. ஆனால் இந்த மக்களின் எதிர்காலத்திற்கு உதவலாம்'' என்றவர் தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ரூ.3 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.