ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

அன்றைக்கிருந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது மிகவும் அரிது. எப்படியோ கஷ்டப்பட்டு இளையாராஜாவை நெருங்கி கதை சொல்லி விடுவார்கள். ஓரிரு நாட்களிலேயே கதைக்கு ஏற்ற மாதிரி நான்கைந்து பாடல்களை தயார் செய்து கொடுத்து விடுவார். பாடல்களை வாங்கிய தயாரிப்பாளர்களால் சில காரணங்களால் படம் தயாரிக்க முடியாமல் போய்விடும். இளையராஜாவின் பாட்டுகள் மட்டும் அவர்கள் கையில் இருக்கும்.
இதை அறிந்து கொள்ளும் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அந்த பாடல்களை விலைக்கு வாங்கி, அதற்கேற்ப கதைகள் எழுதி படம் தயாரித்து விடுவார்கள், இளையராஜா என்ற பெயருக்கும், பாடல்களுக்காகவுமே படம் வெற்றி பெற்று விடும்.
அப்படி உருவான படங்களில் முக்கியமானது 'பாரு பாரு பட்டணம் பாரு'. 'பிள்ளைநிலா' வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு காமெடி படம் இயக்க விரும்பினார் மனோபாலா. இதற்கான கதை தேடியபோது ஒரு தயாரிப்பாளரிடம் 5 பாடல்கள் இருப்பதை கேள்விப்பட்டு தயாரிப்பாளர் கலைமணி அந்த பாடல்களை வாங்கி வந்து அதற்கேற்ப ஒரு கதை எழுதினார். அந்த கதையை மனோபாலா இயக்கினார்.
ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாயகன் அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம். மோகன், ரஞ்சனி நடித்தனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, பாடல்கள் ஹிட்டாது. இதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு பெரிய வெற்றியை பெற்றது.