ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா |

அன்றைக்கிருந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது மிகவும் அரிது. எப்படியோ கஷ்டப்பட்டு இளையாராஜாவை நெருங்கி கதை சொல்லி விடுவார்கள். ஓரிரு நாட்களிலேயே கதைக்கு ஏற்ற மாதிரி நான்கைந்து பாடல்களை தயார் செய்து கொடுத்து விடுவார். பாடல்களை வாங்கிய தயாரிப்பாளர்களால் சில காரணங்களால் படம் தயாரிக்க முடியாமல் போய்விடும். இளையராஜாவின் பாட்டுகள் மட்டும் அவர்கள் கையில் இருக்கும்.
இதை அறிந்து கொள்ளும் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அந்த பாடல்களை விலைக்கு வாங்கி, அதற்கேற்ப கதைகள் எழுதி படம் தயாரித்து விடுவார்கள், இளையராஜா என்ற பெயருக்கும், பாடல்களுக்காகவுமே படம் வெற்றி பெற்று விடும்.
அப்படி உருவான படங்களில் முக்கியமானது 'பாரு பாரு பட்டணம் பாரு'. 'பிள்ளைநிலா' வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு காமெடி படம் இயக்க விரும்பினார் மனோபாலா. இதற்கான கதை தேடியபோது ஒரு தயாரிப்பாளரிடம் 5 பாடல்கள் இருப்பதை கேள்விப்பட்டு தயாரிப்பாளர் கலைமணி அந்த பாடல்களை வாங்கி வந்து அதற்கேற்ப ஒரு கதை எழுதினார். அந்த கதையை மனோபாலா இயக்கினார்.
ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நாயகன் அதனால் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம். மோகன், ரஞ்சனி நடித்தனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, பாடல்கள் ஹிட்டாது. இதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு பெரிய வெற்றியை பெற்றது.