ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

சர்ச்சைக்குரிய கருத்துகள், காட்சிகளை கொண்ட படங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. சில படங்கள் வெளிவராமலேயே போயிருக்கிறது. அப்படியான ஒரு படம் 1954ம் ஆண்டு வெளிவந்த 'சொர்க்கவாசல்'.
அப்போது அரசியலில் தலைவராக உருவாகி வந்த அண்ணாதுரை சொர்க்கவாசல் என்ற ஒரு நாடகத்தை எழுதி, அதனை அவரது கட்சியினர் நடத்தி வந்தனர். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் அது திரைப்படமானது.
கே.ஆர்.ராமசாமி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, வீரப்பா, ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை, ஏ.கலசலிங்கம் இயக்கினார். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
இறந்தவர்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பூஜைகள் செய்து மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கடவுள் நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தது.
இதனால் படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் படத்திற்கு சான்றிதழ் தரக்கூடாது என்று தணிக்கை குழுவிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டும், பாடல்களில் சில வரிகளை நீக்கியும் சான்றிதழ் வழங்கப்பட்டது.