தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகினார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் ரங்கராஜுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தார். அவற்றை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணியாக உள்ள தனக்கு பராமரிப்பு செலவு தொகை கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், 'நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. எனக்கும், என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு செலவு தொகையை, மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை. மருத்துவம், வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக, மாதம், 6.50 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.