பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து விட்டார். இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணம் இதுதான் என்ற பல தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. அதில் முக்கியமானது சமந்தாவுக்கும் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இருந்த நெருக்கமான தொடர்பும் என்றும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமந்தா தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். ஜிஜி என்றால் சகோதரி என்று பொருள். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும்?
எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சமந்தாவையும் என்னையும் பற்றி யாரும் அப்படி பேசவேண்டாம் என்று நாக சைதன்யா வாய்திறந்து பேசியிருக்கலாம். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இப்போது ரசிகர் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறார்.