வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா என்கிற படம் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டலான வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமும் இதுதான். செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இருவருக்குமான மோதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த காட்சிகளை படமாக்கி முடித்தால் முதல் பாகத்திற்கான அனைத்து காட்சிகளும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.