எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ஆந்திராவில் மரேடுமல்லி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக காக்கிநாடா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
இதனை தொடர்ந்து புதிய லொக்கேசனுக்கு காரில் பயணித்த அல்லு அர்ஜுன், வழியில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த சாதாரண ஹோட்டல் ஒன்றை கண்டதும் காரை நிறுத்த சொல்லி, அங்கே உணவருந்தினார். அதன்பின் வெளியே வந்த அவர், கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்தும் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சாலையோர கடையில் சாப்பிட்ட அல்லு அர்ஜுனின் எளிமையை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.