தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சென்னை: நடிகர் மம்மூட்டி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி, நில நிர்வாக கமிஷனர், 2021 மார்ச்சில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.