ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார் திலிப். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது இடைவெளி விட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான கிழவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.
சமீபத்தில் கூட தலையில் பாதிக்கு மேல் முடி இல்லாமல், துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு தொப்பை வயிற்றுடன், சோப்பு போட்டு குளிப்பது போன்று திலீப் காட்சி அளிக்கும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. நடிகர் திலீப் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கிடைத்தவரை லாபம் என கமர்சியல் படங்களில் நடித்து காசு பார்த்துவிட்டு போகாமல், தனது ஆத்ம திருப்திக்காக விதவிதமான கதாபாத்திரங்களை தேடி அவர் நடிப்பது, அவர் மீதான பிரமிப்பை அதிகரிக்கிறது.