வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் |
வக்கீல் சாப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒருபக்கம் அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் நடிகர் பவன் கல்யாண்.. இன்னொரு பக்கம் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே பவன் கல்யாணை வைத்து குஷி, பங்காரம் ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு பவன் கல்யாணை வைத்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கிரிஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தநிலையில் கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா, அல்லது படமே கைவிடப்பட்டு விட்டதா என பவன் கல்யாணின் ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. தற்போது அவர்களது சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லும் விதமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்தப்படம் குறித்து அப்டேட் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறியுள்ளார் ஏ.எம்.ரத்னம்,