25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சர்வானந்த்.. ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் சர்வானந்த். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இவர் நடித்த 'ஸ்ரீகரம்' என்கிற படம் வெளியானது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஒடிடி பிளாட்பார்மில் வெளியானபோதும் கூட வசூல் ரீதியான வரவேற்பை பெற்றதாம். ஆனாலும் தனக்கு தரப்பட வேண்டிய சம்பள பாக்கித்தொகையை மட்டும் தயாரிப்பாளர் தராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சட்டரீதியாக வழக்கு தொடர்ந்திருக்கிறாராம் சர்வானந்த்.
ஸ்ரீகரம் படத்திற்காக சர்வானந்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு ரிலீசுக்கு முன்பே நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாம். பட ரிலீசுக்கு பிறகு மீதி இரண்டு கோடியை தருவதாக சொன்னவர்கள் வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து மீதி ஒன்றரை கோடியை தனக்கு செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் சர்வானந்த்