மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சர்வானந்த்.. ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் சர்வானந்த். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இவர் நடித்த 'ஸ்ரீகரம்' என்கிற படம் வெளியானது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஒடிடி பிளாட்பார்மில் வெளியானபோதும் கூட வசூல் ரீதியான வரவேற்பை பெற்றதாம். ஆனாலும் தனக்கு தரப்பட வேண்டிய சம்பள பாக்கித்தொகையை மட்டும் தயாரிப்பாளர் தராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சட்டரீதியாக வழக்கு தொடர்ந்திருக்கிறாராம் சர்வானந்த்.
ஸ்ரீகரம் படத்திற்காக சர்வானந்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு ரிலீசுக்கு முன்பே நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாம். பட ரிலீசுக்கு பிறகு மீதி இரண்டு கோடியை தருவதாக சொன்னவர்கள் வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து மீதி ஒன்றரை கோடியை தனக்கு செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் சர்வானந்த்