பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
ஒரு பக்கம் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகிகொண்டு இருக்க, இன்னொரு பக்கம் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா மருத்துவ உபகரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நிகில் சித்தார்த்தாவும், பாலிவுட் நடிகர் சோனு சூட் பாணியில், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் மருத்துவ உதவி கேட்பவர்களுக்கு, கடந்த சில நாட்களாகவே, தேடிச்சென்று உதவிகளை செய்து வருகிறார்.
ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர், இ-பாஸ் பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகில் சித்தார்த், ஐதராபாத்தில் இதுபோன்ற மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோது, அவரிடம் இ-பாஸ் இல்லாததால் வாகன சோதனையின்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மருத்துவ உதவிகள் செய்து வருவதாகவும், தற்போது நோயாளி ஒருவருக்காக மருந்துகளை கொண்டு சென்று கொண்டிருப்பதாக கூறியும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லையாம்.
இதுகுறித்து நிகில் சித்தார்த்தா கூறும்போது, “அத்தியாவசிய மருத்துவ உதவிகளுக்காக பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என்று தான் நினைத்திருந்தேன். அதுமட்டுமல்ல, இ-பாஸ் பெற கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் விண்ணப்பித்தும் சர்வர் பிரச்சனையால் கிடைக்கவில்லை. மருத்துவ அவசர உதவிகளை இ-பாஸ் இன்றி உடனே அனுமதிக்க வேண்டும்” என வருத்ததுடன் கூறியுள்ளார்.