புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பணமாக நிதி உதவி செய்வதுடன் ஒரு சிலர் மருத்துவ உதவிகளையும் நேரடியாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் மோகன்லால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி திட்டத்தை தற்போது துவங்கியுள்ளார்.
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 200 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் போர்ட்டபிள் எக்ஸ்-ரே மிசின் என மூன்று அடுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது” என கூறியுள்ளார்..