விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்-14 அன்று துவங்கியது. இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். கேரளாவிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளதால், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள், அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியுள்ளது.
தற்போது 89வது நாளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் நூறு நாட்களை தொட இன்னும் 11 நாட்களே உள்ளன.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சியின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது என்பதாலும், இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் டிஆர்பி ரேட்டிங்காலும் இன்னும் இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியை நீட்டிக்க முடிவு செய்துள்ளார்களாம். அந்தவகையில் இந்த சீசன்-3 மொத்தம் 114 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை தான் ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.