மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இயக்கிய இந்தப்படத்திற்கு பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரும் பிரபல கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதி இருந்தார். இவர் மறைந்த சீனியர் நடிகரான பரத் கோபியின் மகன் ஆவார்.
வழக்கமாக இதற்கு முன்பு திலீப் நடித்த கம்மர சம்பவம், பிரித்விராஜ் நடித்த 'தியான்' என முரளிகோபி எழுதிய கதைகள் படமாக மாறியபோது அவை வெற்றியை பெற தவறி இருந்தன.. ஆனால் அந்த ராசியை லூசிபர் படம் முறியடித்து விட்டது. இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்க இருக்கும் பிரமாண்ட படத்திற்கு கதை எழுதுகிறார் முரளிகோபி. அறிமுக இயக்குனர் ஷிபு பஷீர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு.