ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இயக்கிய இந்தப்படத்திற்கு பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரும் பிரபல கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதி இருந்தார். இவர் மறைந்த சீனியர் நடிகரான பரத் கோபியின் மகன் ஆவார்.
வழக்கமாக இதற்கு முன்பு திலீப் நடித்த கம்மர சம்பவம், பிரித்விராஜ் நடித்த 'தியான்' என முரளிகோபி எழுதிய கதைகள் படமாக மாறியபோது அவை வெற்றியை பெற தவறி இருந்தன.. ஆனால் அந்த ராசியை லூசிபர் படம் முறியடித்து விட்டது. இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்க இருக்கும் பிரமாண்ட படத்திற்கு கதை எழுதுகிறார் முரளிகோபி. அறிமுக இயக்குனர் ஷிபு பஷீர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு.