புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த பத்து வருடங்களில் மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட துல்கர் சல்மான்,. தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்கிறார்.. இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்தநிலையில் நாயகி டயானா பென்ட்டியும் நேற்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து துல்கருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டயானா, முதன்முறையாக மலையாளத்தில் நடிப்பது, அதுவும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.