புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷயம்.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 தயாராகி, வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தான் பேசும் ஒரு வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். கூடவே ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மோகன்லால். மேலும், “உங்கள் குடும்பத்தை காக்க நீங்கள் எந்த அளவுக்கு துணிவீர்கள்” என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “:நான் எப்போதுமே ஒரு படி முன்னாடியே செல்வேன்.. என்னுடைய அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என யாராவது யூகிக்க முடியுமா ?. உங்களுடைய தியரிகளை ஷேர் பண்ணுங்கள்” என்று ரசிகர்களுக்கு சவாலும் விடுத்துள்ளார்.