ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷயம்.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 தயாராகி, வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தான் பேசும் ஒரு வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். கூடவே ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மோகன்லால். மேலும், “உங்கள் குடும்பத்தை காக்க நீங்கள் எந்த அளவுக்கு துணிவீர்கள்” என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “:நான் எப்போதுமே ஒரு படி முன்னாடியே செல்வேன்.. என்னுடைய அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என யாராவது யூகிக்க முடியுமா ?. உங்களுடைய தியரிகளை ஷேர் பண்ணுங்கள்” என்று ரசிகர்களுக்கு சவாலும் விடுத்துள்ளார்.




