சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஆராட்டு என்கிற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்..
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே ஆக்ரோஷமான மோகன்லாலை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என, படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டரில் மோகன்லாலின் ஆக்சன் லுக்கை பார்த்ததும் அவரது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளார்கள்.. குறிப்பாக புலிமுருகன் படத்திற்கு பிறகு, தங்களை திருப்திப்படுத்தும் ஆக்சன் படமாக 'ஆராட்டு' இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.