இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிக்க வந்து ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யமாக இவர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் சன்னி வெய்ன் என்பவர். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாரி நிவின்பாலியை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
எப்படி தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது தனது நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர் இருப்பது போல பார்த்துக் கொள்கிறாரோ, அதேபோலத் தான் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது நட்பு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இவர்கள் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.