மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
எந்த மாநிலமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவது, குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆந்திர போக்குவரத்து போலீஸார் இதற்காக என்னவெல்லாமோ விழிப்புணர்வு விஷயங்களை அமல்படுத்தியும் ஹெல்மெட் அணிவதை பெரிய அளவில் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
அதாவது பரத் ஆனே நேனு என்கிற படத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முதல்வராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. அப்படிப்பட்டவர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினால், வாகன ஓட்டிகள், குறிப்பாக அவரது ரசிகர்களாவது அதை பின்பற்றுவார்கள் என நினைத்தனர் போக்குவரத்து போலீஸார். அதன்படி மகேஷ்பாபு ஹெல்மெட் அணிந்தபடி வண்டி ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.