டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் மகேஷ்பாபுவுக்கு, அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் தான் ஒக்கடு மற்று போக்கிரி. இதில் ஒக்கடு படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்கள் முடிவடைந்து விட்டது. குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ தயாரித்திருந்தார். இந்தப்படம் தான் பின்னாளில் விஜய் நடிக்க 'கில்லி'யாக ரீமேக் ஆனது.
ஒக்கடு படத்தின் 18ஆம் வருட கொண்டாட்ட புகைப்படத்தை மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இது தயாரிப்பாளரை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது..
“தவறுகள் நிகழ்வது சகஜம் தான் பாபு.. 18ஆம் வருட கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது நம்ரதா என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.. ஆனாலும் அவரது பேவரைட் படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளாரே, அதுவே எனக்கு மகிழ்ச்சி தான்” என அதுகுறித்து வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தார் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ.
அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட நம்ரதா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.




