ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த அக்டோபர் மாதமே திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் கேரளாவிலோ கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களை திறக்க தடை விதித்திருந்தது அந்த மாநில அரசு. இந்தநிலையில் ஜன-5 முதல் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளை திறந்துகொள்ள கேரள அரசு விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில் தற்போது எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் கேரளாவில் திரையரங்குகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது கேரளா பிலிம் சேம்பர், அரசு விதித்துள்ள அதிகப்படியான வரிச்சுமையை விலக்குவதோடு மற்றும், ஊரடங்கு காலகட்டத்திற்கான மின் கட்டணத்தில் சலுகையும் அளிக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோல இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை திருப்பி செட்டில் செய்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத புதிய சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போது கேரள பிலிம் எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவராக இருக்கும் நடிகர் திலீப் இறங்கியிருக்கிறாராம்.