பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
1992ல் கேரளவையையே உலுக்கிய கொலை வழக்கு தான் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கு.. 28 வருடங்கள் கழிந்த நிலையில், இவரை கொலை செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவரும் கன்னியாஸ்திரி ஒருவரும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும் இந்த கொலை நிகழ்வை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான திருடன் ஒருவனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கையும் அந்த நல்ல திருடனையும் மையப்படுத்தி சோரன் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பது தான். இந்தப்படம் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் செயின்ட் அந்திக்காடு. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமை எங்களுக்கு கிடைத்துள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.