பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாள திரையுலகில் நடிகர் பஹத் பாசிலுக்கு வெற்றி படமாக அமைந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் ஒரு குணசித்திர நடிகராக அறிமுகமானவர் தான் அலான்சியர் லே லோபஸ். எதார்த்தமாக நடித்திருந்த அவருக்கு அந்த படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன. ஒரு கட்டத்தில் மீடு குற்றச்சாட்டுக்கும் ஆளாகி அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அதிலிருந்து வெளிவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் போலீஸ் யூனிபார்மில் மெலிந்த உடல் தோற்றத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
பின்னர் இது அவர் தற்போது நடித்துள்ள 'வேற ஒரு கேஸ்' என்கிற படத்திற்காக அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்று தெரிய வந்தாலும் இவர் உடல் மெலிந்து இருப்பதற்கு காரணம் என்ன, உடல் பிரச்னையா என்றும் ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செபி சவுகத் கூறும்போது, “அலான்சியர் லே நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் குறித்து அவரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் இந்த கதாபாத்திரத்திற்கு உடல் எடையை குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அதற்காக சில டிப்ஸ்களையும் சொல்லியிருந்தேன்
அதன்பிறகு படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் அவருக்கு ஆடை அளவு எடுப்பதற்காக சென்றபோது தான் அவர் இப்படி மெலிந்து இருப்பதை பார்த்தேன். ஏதாவது உடல் பிரச்னையா என்று கேட்டபோது, இல்லை இந்த படத்திற்காக நீங்கள் சொன்ன டயட்டை கடைபிடித்து உடல் எடையை குறைத்துள்ளேன் என்று கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். மற்றபடி சமீபத்தில் டப்பிங் பேச வந்தபோது அவர் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அதனால் ரசிகர்கள் இவர் குறித்து தேவையில்லாமல் புதிய கட்டுக் கதைகளை உருவாக்குவதை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.