தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்ததாக நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். ஆனால் பின்னர் இது குறித்த விசாரணையில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட போலியான குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்றவை என்றும் பல வழக்குகளில் நிரூபணம் ஆகின. அப்படித்தான் நடிகை மினு முனீர் என்பவர் பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். காவல்துறையில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதியப்பட்டது.
அதேசமயம் நடிகை மினு முனீரும் அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திரன் மேனனும் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது வக்கீலான சங்கீத் லூயிஸ் என்பவரும் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.