சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 30 வருட காலகட்டத்தில் இப்போதுதான் முறையாக தலைவர் பதவிக்கு ஒரு பெண் அதாவது நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஆணாதிக்கம் கொண்ட பலர் அவர் போட்டியிடுவதை தடுக்க முயற்சித்தனர். அது முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குலைக்கும் விதமாக எப்போதோ சில மாதங்களுக்கு முன் ச்வ்வ்தா மேனன் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக இப்போது அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு நபர் மூலமாக புகார் அளித்ததாகவும் அதன் காரணமாக ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் இதே கருத்தை முன்வைத்து, விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்வேதா மேனன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி அருண் இந்த வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
“இந்த புகாரானது மிகவும் குறுகிய காலத்தில் பதியப்பட்டு விரைவாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. முறைப்படியான போலீஸ் விசாரணை எதுவும் இன்றி அவசர கதியில் இந்த எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது அதனால் ஸ்வேதா மேனன் மீதான விசாரணையை தற்சமயம் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடுவதாக நீதிபதி கூறியுள்ளார் அந்த வகையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஸ்வேதா மேனனுக்கு வெற்றிக்கு குறுக்கே விழுந்த மிகப்பெரிய தடையும் நீங்கி விட்டது.. கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.