தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அறிமுகமான சமயத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். அதில் குஞ்சாக்கோ போபன், பாவனா ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக தங்களது பயணத்திற்காக வந்த இடத்தில் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “நான் என்னுடன் நடித்த முதல் படத்திலிருந்து ஒரு பப்ளி பெண்ணாக பார்த்து வந்த நடிகை பாவனாவுடன் எதிர்பாராத விதமான ஒரு சந்திப்பு இது. வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வரும் அவரைப் பார்க்கும்போது இதயம் நெகிழ்ந்தது” என்று கூறியுள்ளார். குஞ்சாக்கோ போபனும் பாவனாவும் 'சொப்பனக்கூடு, ஹிருதயத்தில் சூக்ஷிக்கான், டாக்டர் லவ்' உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.