ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
கதைக்காக மட்டுமே ஹீரோக்களை தேடிப்போகும் வெகு சில இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அவர் மீண்டும் அவரை வைத்து 'நேர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தபின் அவர் அடுத்ததாக மலையாள திரையுலகின் இரண்டாம் நிலை நடிகரான ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார். அதையடுத்து வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' என்கிற படத்தை இயக்கினார். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கைகோர்ப்பார் என்று பார்த்தால் அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலியை வைத்து தற்போது மிராஜ் (மிரட்சி) என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜித்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.