'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் |
தெலுங்கு திரை உலகில் முன்னணி இளம் நடிகர்கள், சீனியர் நடிகர்கள் என பலர் இருக்கும் நிலையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் விஷ்ணு மஞ்சு கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 'கண்ணப்பா' என்கிற படத்தை தயாரித்து அதில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் என பான் இந்திய பிரபலங்களை நடிக்க வைத்து வரும் ஏப்ரல் மாதம் அந்த படத்தை ரிலீஸுக்கு தயார் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தனது தந்தை மோகன்பாபு உடன் சேர்ந்து சென்று நேரில் சந்தித்து அவரது செயல்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து தனது படத்திற்கான வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கானா முதல்வரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர் தெலுங்கு திரை உலக வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அவருடன் மேலும் திரையுலகம் குறித்த முக்கியமான பல விஷயங்களை விவாதித்தேன்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் புஷ்பா-2 திரைப்படம் முதல் நாள் வெளியீட்டில் ஏற்பட்ட ஒரு பெண்ணின் அகால மரணம் தொடர்பாக படங்களை திரையிடுவதில் பல கண்டிப்பான விதிமுறைகளை முதல்வர் ரேவந்த் ரெட்டி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். அடுத்து தனது கண்ணப்பா திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருப்பதால் முன்கூட்டியே அது குறித்து சில விஷயங்களை விளக்கி படத்திற்கான சில சலுகைகளை பெறுவதற்காகவும் தான் விஷ்ணு மஞ்சு இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.