ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குனர் என அனைவராலும் மிக உயரத்தில் வைத்து போற்றப்பட்டு வருபவர் எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர். 91 வயதான இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்சர்வேஷனில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தற்போது வாசுதேவன் நாயரால் பேசவோ அசையவோ இயலவில்லை என்று கூறியுள்ளனர். வாசுதேவன் நாயரின் மனைவியும், இளைய மகளும் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
தனது 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர் எம்டி வாசுதேவன் நாயர். அதன் பிறகு 1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973 இல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்
அதுமட்டுமல்ல 1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். குறிப்பாக வரலாற்று கதைகளை எழுதுவதில் இவர் வித்தகரும் கூட. அதற்கு பழசிராஜா திரைப்படத்தை இன்னொரு உதாரணமாக கூறலாம். சமீபத்தில் கூட இவரது எழுத்தில் உருவான 10 சிறுகதைகளை ஒரு ஆந்தாலஜி படமாக உருவாக்கி மனோரதங்கள் என்கிற பெயரில் வெளியிட்டனர். இதில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒவ்வொரு கதையிலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.