கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று மிக பெரிய அளவில் வெளியானது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் அதையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை முதல் பாகத்தின் வெற்றி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் படங்களே கூட இந்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டதும் ஆச்சரியம்தான்.
இந்த படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜதாரா என்கிற ஒரு நடனம் அதற்காக அல்லு அர்ஜுன் சேலை அணிந்தபடி ஒரு பெண் சாமியார் போல நடனமாடுவதும் அதன் பிறகு எதிரிகளை துவம்சம் செய்வதும் என கிட்டத்தட்ட 19 நிமிட நீளமான காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரபு நாடுகளில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட போது இது மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 19 நிமிட காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டு தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.