அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று மிக பெரிய அளவில் வெளியானது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் அதையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை முதல் பாகத்தின் வெற்றி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் படங்களே கூட இந்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டதும் ஆச்சரியம்தான்.
இந்த படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜதாரா என்கிற ஒரு நடனம் அதற்காக அல்லு அர்ஜுன் சேலை அணிந்தபடி ஒரு பெண் சாமியார் போல நடனமாடுவதும் அதன் பிறகு எதிரிகளை துவம்சம் செய்வதும் என கிட்டத்தட்ட 19 நிமிட நீளமான காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரபு நாடுகளில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட போது இது மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 19 நிமிட காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டு தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.