ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் |
மலையாள திரையுலகில் புலனாய்வு திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் திரைப்படம் பாரன்சிக் துறை அடிப்படையிலான புலனாய்வு கிரைம் திரில்லர் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தை இயக்குனர்கள் அனாஸ்கான் மற்றும் அகில்பால் என்கிற இரட்டையர்கள் இயக்கியிருந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து அவர்கள் மீண்டும் நடிகர் தாமஸை வைத்து தற்போது ஐடென்டிடி என்கிற படத்தை இயக்கி வருகின்றனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் வினய் ராய் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் நோக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சாட்சிகள் சொல்லும் அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை வரையும் ஓவியராக காவல்துறையில் பணியாற்றும் நபராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். அப்படி திரிஷா சொல்லும் அடையாளங்களுடன் ஒருவரை அவர் வரைவதாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரை பார்த்து விட்டு நடிகர் கார்த்தி, “மிகவும் உற்சாகமாக இருக்கிறது. குட் லக்” என்று தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் டொவினோ தாமஸ் உள்ளிட்ட ஐடென்டிடி படக்குழுவினருக்கு அங்கு தெரிவித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸும் கார்த்திக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.