டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக இருவரும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2008ல் வெளியான 'Twenty:20' மலையாள படத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மம்முட்டி,மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் மற்றொரு மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.




