எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். இவரது நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் நடிப்பிற்கு என குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஒரு நடிகையின் கடத்தல் வழக்கில் சிக்கி நிறைய பிரச்னைகளை சந்தித்த இவர், இன்னொரு பக்கம் தனது திரையுலக பயணத்திலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொண்டு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வழக்கமான ஹீரோக்களின் 150ஆவது படங்கள் போல அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படமாகவே உருவாகிறது. இந்த படத்திற்கு தற்போது 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என டைட்டில் வைக்கப்பட்டு திலீப்பின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் திலீப்புடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தியான் சீனிவாசனும் நடிக்கிறார். பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியாகி கவனம் ஈர்த்த ஜனகனமன படத்திற்கு கதை எழுதிய ஷரிஷ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.