ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். இவரது நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் நடிப்பிற்கு என குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஒரு நடிகையின் கடத்தல் வழக்கில் சிக்கி நிறைய பிரச்னைகளை சந்தித்த இவர், இன்னொரு பக்கம் தனது திரையுலக பயணத்திலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொண்டு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வழக்கமான ஹீரோக்களின் 150ஆவது படங்கள் போல அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படமாகவே உருவாகிறது. இந்த படத்திற்கு தற்போது 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என டைட்டில் வைக்கப்பட்டு திலீப்பின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் திலீப்புடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தியான் சீனிவாசனும் நடிக்கிறார். பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியாகி கவனம் ஈர்த்த ஜனகனமன படத்திற்கு கதை எழுதிய ஷரிஷ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.