சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கடந்த சில நாட்களாகவே தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர் ராஜ் தருண் மற்றும் அவரது முன்னாள் காதலியான லாவண்யா சவுத்ரிக்குமான காதல் போராட்டம் தான் பரபரப்பான செய்தியாக இடம் பெற்று வருகிறது. ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டு தற்போது அவருடன் நடித்து வரும் மால்வி மல்கோத்ரா என்பவருடன் நெருக்கம் காட்டி வருகிறார் என குற்றம் சாட்டி காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார் லாவண்யா சவுத்ரி. இது குறித்து ராஜ் தருண் மீது எப்ஐஆரும் போடப்பட்டுள்ளது. ஆனால் ராஜ் தருண் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் நீதிமன்றம் மூலம் நான் நிரபராதி என நிரூபிப்பேன் என்றும் கூறி வருகிறார்.
ராஜ் தருண் தற்போது நடித்து வெளியாகி உள்ள தனது திகரபதர சுவாமி என்கிற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட போது அங்கே ஆவேசமாக உள்ளே நுழைய முயற்சித்த லாவண்யா சவுத்ரி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் இதே போன்று சமீபத்தில் ஒரு டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் லாவண்யா சவுத்ரி கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் நடிகர் ராஜ் தருணின் நண்பரான பாஷா என்பவரும் கலந்து கொண்டார்.
பொதுவாகவே பாஷா சமீப காலமாக பல விவாதங்களில் பேசும்போது தன் நண்பர் ராஜ் தருண் மீது எந்த தவறும் இல்லை என்பது போன்றும் லாவண்யா மீது தான் தவறு இருக்கிறது போன்று பேசி தனது நண்பருக்காக வக்காலத்து வாங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் அதுபோலவே அவர் பேச துவங்க இதனால் கோபமான லாவண்யா சவுத்ரி, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி பாஷா மீது வீசியுள்ளார். இதை எடுத்து ஆவேசமான பாஷா லாவண்யாவை குற்றம் சாட்டியதுடன் மிரட்டல் விடும் தொனியிலும் எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.