இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் நடிப்பு திறமை, கவர்ச்சி என இரண்டையும் ஒன்றாக கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். இப்போதும் இவர் நடித்த ரதி நிர்வேதம் படம் தான் இவரது விலாசமாக ரசிகர்களிடம் அறியப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'களிமண்ணு' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஸ்வேதா மேனன்.
அந்த படத்தை இயக்கியவர் தான் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பிளஸ்சி. 'களிமண்ணு' படத்திற்காக அப்போது நிஜமாகவே கர்ப்பமாக இருந்த ஸ்வேதா மேனன் தனது பிரசவத்தையே சினிமாவுக்காக படம் பிடிக்கும் அனுமதியையும் இயக்குனருக்கு வழங்கினார். அந்த சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச்-28ல் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் பிளஸ்சிக்கும் அவரது படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஸ்வேதா மேனன். இயக்குனர் பிளஸ்சி பற்றி அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட பிளஸ்சியின் 11 வருட தவம் இது. களிமண்ணு படத்தில் அவருடன் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களிலேயே அவர் இந்த கதையுடன் பயணிக்க துவங்கி விட்டார். இது பற்றிய அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். எல்லா நட்சத்திரங்களும் இணைந்து பணியாற்ற விரும்பும் வெகுசில இயக்குனர்களில் பிளஸ்சியும் ஒருவர்” என்று கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.