காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் உருவான இந்த படம் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலைத் தழுவி படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் பட தயாரிப்பில் இருந்த இந்த படம் இந்த வருடம் வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகள் மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் 150 கோடி வரை வசூலித்தது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல பாலிவுட் சீனியர் நடிகை ஜெயப்ரதா, ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு நிச்சயமாக சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரித்விராஜின் நடிப்பு விவரிக்கவே முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது என்றும், பிளஸ்சி மீண்டும் தன்னை ஒரே வித்தியாசமான இயக்குனர் என நிரூபித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2011ல் இயக்குனர் பிளஸ்சி இயக்கிய பிரணயம் படத்தில் ஜெயப்ரதா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.