லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் பா.ஜ.விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள் குறித்தும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.