வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலகில் 53வது கேரள அரசு திரைப்பட விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அப்பன் என்கிற படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த ஜூரி விருது குணச்சித்திர நடிகர் அலான்சியர் லே லோபஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றபோது, “எங்களுக்கு பெண் வடிவத்தில் இருக்கும் விருதுகளை தந்து தூண்ட வேண்டாம். ஆண்மையுடன் கம்பீரமாக இருக்கும் நமது கேரள முதல்வர் போல ஆண்மைத்தனம் கொண்ட விருதுகளை வழங்குங்கள். அப்படி ஒரு விருது பெறும்போது நான் நடிப்பை விட்டே ஓய்வு பெற்றுவிடுவேன்” என்று கூறினார்.
கேரள அரசு திரைப்பட விருதுகள் பெண் சிற்பங்களின் வடிவில் தான் கொடுக்கப்படுகின்றன. இதனாலேயே இவர் அப்படி ஒரு முதல்வர் முன்னிலையில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவிட்டார் என கூறி இவரது பேச்சுக்கு மிகவும் விமர்சனங்களும் கண்டனங்களும் வருகின்றன. ஆனாலும் நான் பேசியதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் கூறி உள்ளார் அலான்சியர் லே.
இதற்கு முன்னதாக இதே போன்று விருது வழங்கும் விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் இவர் சர்ச்சையாக பேசி உள்ளதுடன், மீ டு விவகாரத்தில் ஒரு இளம் நடிகையால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்த வழக்கிலிருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.