படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் |
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்க இருக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எல் 2 : எம்புரான் படத்திற்கான முன்கட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதே சமயம் இந்த வருடம் திடீரென எதிர்பாராத விதமாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும், பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிக்கும் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர மறுக்க முடியாமல் அவற்றை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ் ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகரான பொம்மன் இராணியின் மகன் கயோஸ் என்பவர் இயக்குகிறார். அதுமட்டுமல்ல நடிகர் சைப் அலிகானின் மகன் இப்ராஹிம் கான் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படம் ஒரு எமோஷனல் திரில்லர் உருவாக இருக்கிறது.