நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 2018 என்கிற படம் மலையாள ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியது. இதற்கு முன் மோகன்லால் நடித்த புலிமுருகன், லூசிபர் ஆகிய படங்கள் செய்திருந்த வசூல் சாதனையை முறியடித்து தற்போது 200 கோடி என்கிற மாபெரும் வசூல் இலக்கை எட்டியுள்ளது. இந்த படம் வெளியாகி 33 நாட்கள் ஆனபோதும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் குறையாத நிலையில் திடீரென ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.
குறைந்தபட்சம் ஒரு படம் வெளியாகி 42 நாட்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறையையும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மீறியுள்ளார். இதை கண்டித்து சமீபத்தில் கூட மலையாள விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தயாரிப்பாளரின் முடிவு குறித்தும் அதற்கு இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒப்புக்கொண்டது குறித்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் படத்தில் முக்கியமான ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ்.
இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “இது பற்றி எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதன்படி செய்யட்டும்.. கடந்த சில நாட்களாகவே இதுதான் போய்க் கொண்டிருக்கிறது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.