15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதே ஆட்சி தொடருமா என்கிற பரபரப்பு நிறைந்த தேர்தலாக கருதப்படுகிறது. அதனால் இந்த தேர்தலில் பலரும் ஆர்வத்துடன் ஓட்டளிப்பதை காண முடிந்தது. திரையுலக பிரபலங்களும் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருவதுடன், மக்களையும் ஓட்டுச்சாவடிக்கை வந்து ஓட்டளிக்க உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காந்தாரா படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தி உள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ரிஷப் செட்டி, “நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதற்காக பெருமைப்பட வேண்டும். மேலும் ஓட்டளிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல நமது பொறுப்பும் கூட. ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதற்காக ஒவ்வொருவரும் சரியான நபரை தேர்ந்தெடுத்து ஓட்டளிக்க வேண்டியது அவசியமாகும். கர்நாடகாவின் வளமான எதிர்காலத்திற்காக நான் ஓட்டளித்துள்ளேன். நீங்கள் ஓட்டளித்து விட்டீர்களா..?” என்று மற்றவர்களின் ஓட்டளிக்க உற்சாகப்படுத்தியுள்ளார் ரிஷப் ஷெட்டி.