டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரித்தது இவர்தான். மேடைகளில் அதிரடியாக மற்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசுவதில் வல்லவரான தில் ராஜு தயாரிப்பில் சிறிய பட்ஜெட் படமாக கடந்த மாதம் பாலகம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நடிகர் விஜய் பற்றி கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்கினார் தில் ராஜு.
தற்போது இந்த படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில் ஆந்திராவில் உள்ள பல கிராமங்களில் பொதுவெளியில் திரை கட்டி இந்த படத்தை திரையிட்டு ஊர் மக்கள் ரசித்துள்ளனர். இந்த படம் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தும் வகையில் அதே சமயம் இளைஞர்களையும் கவரும் விதமாக பாமர கிராமத்து மக்களுக்கும் புரியும் விதமாக உருவாகியுள்ளதால் பலரும் இந்த படத்தை பாராட்டியதுடன் சினிமா தியேட்டருக்கே செல்லாத தங்கள் ஊர் மக்களும் பார்க்கட்டும் என்கிற நோக்கில் டிவிடி ப்ரொஜெக்டர் மூலமாக இதைத் திரையிட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோக்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான தில் ராஜு இப்படி அனுமதியின்றி பொதுவெளியில் தனது திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்படி திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளாராம்.