‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கடந்த 2012ம் ஆண்டு தனது கல்லூரி காதலியான உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் உபாசனா. அதோடு பத்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், நாங்கள் விரும்பும் போது நான் தாயாக மாறுவதை தேர்ந்தெடுத்ததில் உற்சாகமாக இருக்கிறேன், பெருமைப்படுகிறேன்.
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற உள்ளோம். எங்கள் குழந்தைகளை நாங்களே கவனித்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன். இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் இந்த சமூகத்தில் இருந்தோ எங்கள் குடும்பத்தில் இருந்தோ யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. இது எங்களுடைய உறவு மற்றும் எங்களுடைய வாழ்க்கை என்பதால் நாங்களே அனைத்து விஷயங்களிலும் முடிவெடுத்தோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது ராம்சரண்- உபாசனா தம்பதியினர் அமெரிக்கா சென்று நிலையில் அவர்கள் குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்கும் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து உபாசனா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், எங்களுடைய குழந்தை இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையில் பிறக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.