விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் |
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சில படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டி நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இவர் இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
குஸ்தியை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ராஜஸ்தான் பகுதியில் தான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மராத்தி நடிகை சோனாலி , மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள சோனாலி, ‛‛மோகன்லால் போன்ற ஒரு லெஜன்ட் நடிகருடன் நடிப்பதுடன் எனது புதுவருடம் சூப்பராக ஆரம்பித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனாலி தற்போது மராத்தியில் நடித்துள்ள விக்டோரியா என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.