கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சில படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டி நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இவர் இயக்குவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
குஸ்தியை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ராஜஸ்தான் பகுதியில் தான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மராத்தி நடிகை சோனாலி , மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள சோனாலி, ‛‛மோகன்லால் போன்ற ஒரு லெஜன்ட் நடிகருடன் நடிப்பதுடன் எனது புதுவருடம் சூப்பராக ஆரம்பித்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனாலி தற்போது மராத்தியில் நடித்துள்ள விக்டோரியா என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.